கட்டுபாடற்ற வேகத்தில் வந்த வாகனங்களுக்கு அபராதம்

by Editor / 26-11-2021 12:14:06pm
கட்டுபாடற்ற வேகத்தில் வந்த வாகனங்களுக்கு  அபராதம்

திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருகில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி வட்டார போக்குவரத்து அலுவலர்  சு.மோகன் தலைமையில் வாகன ஆய்வாளர்கள்-கா.பன்னீர்செல்வம், கோ.மோகன்,லீலாவதி,ஆகியோர் கண்காணிப்பில்தேசிய நெடுஞ்சாலை பகுதியில்  நடத்தப்பட்ட சிறப்பு அதிவேக வாகன ஆய்வில் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த 26 வாகனங்களுக்கும்,இதர வகை வாகனம் 2ம் என 28 வாகனங்களுக்கு என மொத்தம் 75ஆயிரத்து 500 ரூபாய்.அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டுபாடற்ற வேகத்தில் வந்த வாகனங்களுக்கு  அபராதம்
 

Tags :

Share via