தீயில் கருகி மூதாட்டி பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் மட்டம்பட்டி வன்னியர் தெருவை சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற மூதாட்டி விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது திடீரென ஆரோக்கியமேரி புடவையில் திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில், தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனையடுத்து ஆரோக்கியமேரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆரோக்கிய மேரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Tags :