தந்தையை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்

by Staff / 13-12-2022 03:43:06pm
தந்தையை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய மகன்

கர்நாடகாவில் மகன் ஒருவர் தனது தந்தையை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்ட சம்பவம் நடந்துள்ளது.பாகல்கோட்டை மாவட்டம் முத்தோவில் வசித்து வருபவர் பரசுராம் குலாலி (54), இவரது மகன் விட்டல் குலாலி (20). தந்தை தினமும் குடித்துவிட்டு மகனை அடிப்பது வழக்கம். கடந்த டிசம்பர் 6ம் தேதி குடித்துவிட்டு மகனுடன் தகராறு செய்துள்ளார். கோபம் தாங்காத விட்டல், தந்தையை கம்பியால் தாக்கி கொன்றார். பின்னர், உடலை 30 துண்டுகளாக வெட்டி, தனது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார். அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விட்டல் குலாலியிடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via