சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் 77 கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 81 குற்றவாளிகளை நேரடியாக தணிக்கை செய்து 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
Tags : சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் 77 கைது செய்யப்பட்டனர்.