வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

by Admin / 30-08-2021 01:21:51pm
வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


 
வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்ற 500 பேர் வரை தேவை - ரூ.2.5 லட்சம் வரை மாத ஊதியம். குவைத்தில் ஓட்டுநராக பணியாற்ற 43 வயதுக்கு உட்பட்டவர்கள் தேவை - மாத ஊதியம் ரூ.34,500 வரை. அரபு நாடுகளில் சமையலர் வேலை - ஆண்கள் மட்டும் - மாத ஊதியம் ரூ.37,000. குவைத்தில் வீட்டு வேலைக்கு 40 வயது வரை உள்ள பெண்கள் தேவை - மாத ஊதியம் ரூ.32,000 வரை. ஓமனில் Machine Operator-ஆக பணியாற்ற 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தேவை - மாத ஊதியம் ரூ.

 29,000. உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம். விரிவான தகவல்களுக்கு www.omcmanpower.com இணையதளத்தை அணுகி, விண்ணப்பிக்கலாம் எனவும் இதுவரை 10, 350 பேர் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேவைப்பட்டால், மேற்கண்ட இணையதளத்தை அணுகி பயன்பெறலாம் எனவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via