நடுவழியில் நின்ற ரயில்: கைகளால் தள்ளிய பொதுமக்கள்- வைரல்

by Admin / 30-08-2021 01:22:33pm
நடுவழியில் நின்ற ரயில்: கைகளால் தள்ளிய பொதுமக்கள்- வைரல்



 
மத்திய பிரதேசத்தில் ரயில் பெட்டியை கைகளால் தள்ளும் காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் சரிதா என்கிற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நின்று விட்டது. இந்த சோதனை ரயிலில் ஒருபெட்டி மட்டுமே இணைக்கப்பட்டிருப்பது வழக்கம்.இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளால் அழைத்துச் சென்றனர்.

 
ஒரு தண்டவாளத்தில் இருந்து இன்னொரு தண்டவாளத்திற்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளி வைத்த அதிகாரிகளின் செயல் கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

ரயிலை கைகளால் தாங்கிக் கொள்ளும் இந்த  காட்சி இணையங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via