கஞ்சா விற்பனை செய்த தனுஷ் குமார் கைது.இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 22-08-2022 09:51:00pm
கஞ்சா விற்பனை செய்த தனுஷ் குமார் கைது.இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

ளியங்குடி -சிந்தாமணியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த சட்டகல்லூரி மாணவர் தனுஷ் குமார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

புளியங்குடி -சிந்தாமணி பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து டிஎஸ்பி அசோக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.புளியங்குடிக்கு வடக்கே பெட்ரோல் பங்க் அருகில் மூன்று நபர்கள் கஞ்சா வைத்து இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனடியாக தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியான இருந்த நபர்களை விசாரணை செய்ததில் அவர் சிந்தாமணி வடக்கு ரத வீதியை சேர்ந்த முருகன் மகன் தனுஷ் குமார் என்பது  தெரிய வந்தது . மேலும் அவர்  சட்டம்  படித்து வருவதாக கூறப்படுகிறது  அவருடன் இருந்த இரண்டு நபர்கள் தப்பிய நிலையில் போலீசார் தனுஷ் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதன் உத்தேச மதிப்பு ஒரு லட்சம் ஆகும் . தப்பி ஓடிய நபர்களை தனிபடையினர் தேடி வருகின்றனர் 

 

Tags :

Share via