மீன் பிடிக்க சென்றவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

by Editor / 06-12-2021 06:07:51pm
மீன்  பிடிக்க சென்றவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்  மழை பெய்தது இதன் காரணமாக வேப்பூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கியது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதே போன்று 
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்ற முதியவர் வெள்ளாற்றில் மீன் பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆவினங்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

மீன்  பிடிக்க சென்றவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
 

Tags :

Share via