வீடற்றோருக்கான புதிய இரவு நேர காப்பகத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் அருகே சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக வீடற் றோருக்கான புதிய இரவு நேர காப்பகத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 2400 சதுர அடி பரப்பளவில் 86 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 80 பேர் தங்கும் வகையில் மின்விசிறி ,கழிப்பறை ,படுக்க வசதி ,போர்வை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் கட்டடம் இயங்க உ ள்ளது. நகரின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags :



















