எதிர்க்கட்சிகளின் குரலை டுவிட்டர் இனி ஒடுக்காது: ராகுல் காந்தி

by Staff / 29-10-2022 10:31:09am
எதிர்க்கட்சிகளின் குரலை டுவிட்டர் இனி ஒடுக்காது: ராகுல் காந்தி

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக தனது டுவிட்டரில் வாழ்த்துக்கள் எலான் மஸ்க். வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராகவும் உண்மையை இன்னும் வலுவாக சரிபார்க்கும் நடவடிக்கைகளில் டுவிட்டர் இனிமேல் ஈடுபடும் என்று நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் ஆளும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சிகளின் குரலை இனி ஒடுக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via