12 -ல் பாலியல் வன்கொடுமை 42 -ல் நீதிமன்றத்தில் புகார்-விரைவில் தீர்ப்பு

by Editor / 24-08-2022 04:09:15pm
12 -ல்  பாலியல் வன்கொடுமை  42 -ல் நீதிமன்றத்தில் புகார்-விரைவில் தீர்ப்பு

உத்தரப் பிரதேசம்: ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். இதனால் சிறுமி கருவுற்றுள்ளார். அவருக்கு கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியதால் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை உறவினர்களிடம் வளர்ந்து வந்த நிலையில், அந்த சிறுமிக்கு 18 வயதான போது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த துயர சம்பவம் கணவருக்கு தெரிந்ததால் அவர் விவாகரத்து செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த பெண் பாலியல் வன்கொடுமையால் பிறந்த தனது மகனை சந்தித்துள்ளார். இந்நிலையில் மகனின் வற்புறுத்தல் காரணமாக சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் குற்றவாளிகளை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அதில் ஒருவரின் DNA-வையும், அந்த பெண்ணின் மகனின் DNA-வையும் சோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via