சிறையில் நளினி முருகன் சந்திப்பு.

by Editor / 20-05-2022 12:18:02pm
சிறையில் நளினி முருகன் சந்திப்பு.

முன்னாள்  பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்போது பரோலில் வெளியே வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவன் முருகனை இன்று சிறையில் நேரில் சந்தித்து பேசினார்.

இதற்காக நளினி தங்கியுள்ள காட்பாடி பிரம்பபுரம் பகுதியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறை அழைத்து வரப்பட்டார்.  வேலூர் மத்திய சிறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும் வழக்கமான சந்திப்பு ஆகும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் விடுதலைகுறித்து இருவரும்  பேசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

 

Tags : Meet Nalini Murugan in jail.

Share via