மகன்இறந்ததுக்கம் தாளாமல் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தந்தை 

by Editor / 06-07-2024 11:37:09pm
மகன்இறந்ததுக்கம் தாளாமல் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தந்தை 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள காமாட்சி தெருவில் வசித்து வரும் செல்வகுமார் ஜெயலட்சுமி தம்பதியின் 8 வயது மகன் அசோக் குமார் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி மதியம் பள்ளியில் வைத்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை உண்ட  சிறுவனுக்கு தொடர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து முதற்கட்ட சிகிச்சைக்காக சிறுவனை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற் சிகிச்சைக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் சிறுவனை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியிலே சிறுவன் பரிதாபமாக பலியானான். 

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செங்கோட்டை காவல்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த நிலையில் அவனது தந்தை செல்வகுமார்  மகன் இறந்த துக்கம் தாளாமல் மிகவும் மனவேதனையில் இருந்துவந்துள்ளார்.இந்தநிலையில் இன்று மதியம் சுப்ரமணியபுரம் பாலத்திற்கு கீழ் நின்ற அவர் செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற போது  எதிர்பாராத விதமாக தண்டவாளத்தையொட்டி போடப்பட்ட சல்லிக்கற்களில் சறுக்கிவிழுந்து பலத்தகாயமடைந்தார்,இதனைக்கண்ட அந்தபபகுதியிலுள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தேறிவிக்கவே விரைந்துவந்த ரயில்வீ போலீசார் அவரை மீட்டு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி அளித்து நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்தசம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மகன்இறந்ததுக்கம் தாளாமல் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தந்தை 

Share via