சென்னை வந்து செயின் பறிக்கும் வடமாநில கும்பல்

by Staff / 11-04-2024 04:08:49pm
சென்னை வந்து செயின் பறிக்கும் வடமாநில கும்பல்

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரியமேடு பகுதியில் அறை எடுத்து தங்கிய இளைஞர்கள், வாடகை பைக்கில்
சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இந்த வடமாநில இளைஞர்கள் சிக்கினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் ( 24), அங்கீத் (20 ), அங்கித் யாதவ் (26) என்பது தெரியவந்தது.

 

Tags :

Share via