சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது.-சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது.-சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது. இந்த மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளது. 4 கொலைகள் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. மீதி குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கொலை வழக்கை விட இந்தாண்டு 25 சதவீத கொலைகள் துப்பு துலங்கி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி கொலை சம்பவத்தில் சம்பந்தப்ட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையா? என்பது தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. முதலில் முதற்கட்ட விசாரணை அறிக்கை வந்ததும் பார்க்கலாம். பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில் கொலை நடப்பது இது ஒன்றும் முதல் முறை இல்லை.
இந்த சம்பவத்தை வைத்து காவல்துறை மீது ரவுடிகளுக்கு பயமில்லை என்று கூறமுடியாது. சட்டப்படி நடந்து வருகிறோம். சென்னை மாநகர் அமைதியான இடம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. கொலை நடக்கவில்லை என்று கூறமுடியாது. ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்.
பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 64 ஆயிரம் சிசிடிவிக்களில் 4 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பழுதான சிசிடிவி கேமராக்களை பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது' என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
Tags : The information released that 18 murders in 24 days in Chennai is false.-Chennai Police Commissioner Shankar Jiwal