இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை

by Staff / 26-05-2022 01:19:05pm
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பிரதமர் பதவியை விட்டு விலக்கபட்ட இம்ரான் தமது ஆதரவாளர்களை தலைநகர் நோக்கி பேரணியாக வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இஸ்லாமாபாத் ராவல்பிண்டி கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வன்முறை ஏற்பட்டது. போலீசாருடன் ஆதரவாளர்கள் மோதல் இதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via