ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்ச ரூபாய் பறித்த 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்சம் ரூபாய் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அஞ்செட்டியில் சேர்ந்த கோபால் ராவ் என்பவரை கடந்த 9ஆம் தேதி ரியல் எஸ்டேட் இடம் காண்பிப்பதாக கூறி அழைத்து சென்ற மூன்று பேர் வனப்பகுதி அருகே கத்தியை காட்டி மிரட்டி 10 லட்ச ரூபாய் பரித்தாக கூறப்படுகிறது. உயிர்க்கு பயந்து தாமதமாக புகார் அளித்த நிலையில் சம்பவம் தொடர்பாக அஞ்சட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :