2வது நாளாக தொழில்நுட்ப கோளாறு 5 மணிநேரம் காத்திருப்புக்கு பின் விமானம் ரத்து என அறிவித்ததால் பயணிகள் வாக்குவாதம்

by Staff / 13-06-2022 11:48:43am
2வது  நாளாக  தொழில்நுட்ப கோளாறு 5 மணிநேரம் காத்திருப்புக்கு பின் விமானம் ரத்து என அறிவித்ததால் பயணிகள் வாக்குவாதம்

 மதுரையில் இரண்டாவது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்ல விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணி 169 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் புறப்படும் நேரம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் சுமார் 5 மணி நேரம் காத்திருப்புக்குப் பின் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்த பயணிகள் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via