அடகு கடை கொள்ளை சம்பவத்தில் தொடர் திருப்பம்

by Staff / 13-06-2022 11:44:43am
அடகு கடை கொள்ளை சம்பவத்தில் தொடர் திருப்பம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அடகு கடை கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக அக்கடையின் மேலாளரை நகைகளை திருடியது அம்பலமானது அடுத்து கைது செய்யப்பட்டார். இரும்புதலை கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் நடத்தி வரும் அடகு கடையில் கடந்த 11ஆம் தேதி மேலாளர் ராஜேந்திரன் இருந்த போது அங்கு வந்த 2 பேர் அவரை அடித்து வாயில் துணியை வைத்து அமுக்கி பீரோவில் இருந்த நகைகளை அள்ளி சென்றதாக கூறப்பட்டது. அங்கு பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது வெளிநபர்கள் அங்கு இல்லை என கூறப்படுகிறது ராஜேந்திரனும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வேறு வழியின்றி தானே நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார் அவரிடமிருந்து 38 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

 

Tags :

Share via