ஈரோட்டில் நாட்டு வெடிகுண்டுகள்பதுக்கிய 2 பேர் கைது மூலப்பொருள்கள் பறிமுதல்

by Staff / 13-06-2022 11:35:26am
ஈரோட்டில் நாட்டு வெடிகுண்டுகள்பதுக்கிய  2 பேர் கைது மூலப்பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி 2 பேர் கைது செய்யப்பட்டனர். புஞ்சை புளியம்பட்டி விண்ணப்பள்ளியில்  உள்ள போலீசார் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குப் பையுடன் அவ்வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை துரத்திப் பிடித்த போலீசார் அவரிடமிருந்த சாக்குப் பையை சோதனையிட்டதில் 20 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து இரண்டு பேரை கைது செய்த போலீசார் வெடிமருந்து அலுமினிய பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories