ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டாக கிடந்த இளைஞரிடன் சடலம்

by Staff / 26-10-2022 05:04:35pm
ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டாக கிடந்த இளைஞரிடன் சடலம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள மோரூர் பகுதியில் சேலம், ஈரோடு செல்லும் இரயில்வே தண்டவாளம் உள்ளது செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த இரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் இரயில் ஓட்டுநர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில்

விரைந்து வந்த இரயில்வே போலீசார் இளைஞரின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டெடுத்து தண்டவாளத்தில் இருந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய போலீசாரின் விசாரணையில் மோரூர் அருகேயுள்ள வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவருக்கு திருமணம் மாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரது தாய் வீட்டில் கடந்த ஐந்து மாதங்களாக இருந்து வந்ததாகவும் அடிக்கடி மனைவி குழந்தையை பார்க்க சசிகுமார் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற சசிகுமார் இரவு தனது வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை இரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக மீட்டெடுத்த போலீசார் சசிகுமார் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சங்ககிரி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் இரண்டு துண்டாக போலீசார் மீட்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via