காமராஜர் படத்துக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை

by Staff / 15-07-2023 01:13:08pm
காமராஜர் படத்துக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை

கல்வி கண் திறந்தவர், மதிய உணவு திட்டம் வகுத்தவர், கர்ம வீரர், படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி என்றெல்லாம் பல்வேறு பட்டங்கள் பெற்ற காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இன்று காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செய்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் காமராஜர் என இபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

 

Tags :

Share via