ரூ.250 கோடி டெண்டர்கள் ரத்து: சென்னை மாநகராட்சி

by Editor / 14-07-2021 08:50:27am
ரூ.250 கோடி டெண்டர்கள் ரத்து: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி ரூபாய் 250 ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. சென்னையை சீரமைக்கும் வகையில் சாலை மேம்பாடு செய்தல், பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு செய்தல் போன்ற பணிகளுக்காக ஒப்பந்தகாரர்கள் இடம் பணி வழங்கப்பட்

சென்னை மாநகராட்சி வழங்கிய இந்த டெண்டரில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்த புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சியின் குழு ஒன்று ஆய்வு செய்தது. அடையாறு, அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயபுரம் ஆகிய 43 பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் 120 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via