பட்டுக்கோட்டை விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு
நேற்று தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணபதி என்ற பெண் இன்று உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :