.30 கோடி சொத்து... சோறு கிடைக்காமல் தற்கொலை

by Staff / 01-04-2023 12:04:43pm
.30 கோடி சொத்து... சோறு கிடைக்காமல் தற்கொலை

ஹரியானாவில் ரூ. 30 கோடி சொத்து வைத்திருந்தும் வயதான தம்பதியினர் உணவு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்கி தாத்ரி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் சந்திரா ஆர்யா (78), பகாலி தேவி (77) ஆகியோர் சாப்பிட முடியாததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். தங்களுக்கு கெட்டுப்போன ரொட்டி கொடுக்கப்படுவதாகவும், மோசமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் சாகும் முன் கடிதம் எழுதியிருந்தனர். தங்களது சொத்துக்களை ஆர்ய சமாஜுக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தனர். உயிழந்த தம்பதியின் பேரன் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via