டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் சம்பவ இடத்திலே பலி

by Staff / 13-06-2022 11:54:06am
டிராக்டரை  முந்தி செல்ல முயன்றபோது சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் சம்பவ இடத்திலே பலி


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் நிலை தடுமாறி விழுந்தபோது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . நரிக்கட்டு வலசு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மொடக்குறிச்சியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி மற்றும் 4 வயது மகள் சுருதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி லிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பட்டறை வேலம்பாளையம் அருகே கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் இருசக்கர வாகனம் வந்ததால் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது ட்ராக்டர் சக்கரம் ஏறியதில் இருவரும் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via