1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை ஒருநாள் பள்ளி விடுமுறை

by Editor / 17-11-2022 09:29:04pm
1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை ஒருநாள் பள்ளி விடுமுறை

சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை ஒருநாள் சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதான சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via