13 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் சுஞ்சுபள்ளி (எம்) வித்யாநகர் காலனியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை எப்ராடுத்தியுள்ளது. அந்த பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது மாணவர் ஹரிகிருஷ்ணா (13) மாரடைப்பால் உயிரிழந்தார். பள்ளியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிறுவனுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tags :