அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றம்-, சட்டம் விதிபடி தான் நடக்கிறேன்- சபாநாயகர்

by Staff / 11-10-2023 01:29:42pm
 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையிலிருந்து  வெளியேற்றம்-, சட்டம் விதிபடி தான் நடக்கிறேன்- சபாநாயகர்


சட்டமன்றத்தில், ஓ.பி.எஸ். அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி  துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

சபாநாயகர் அப்பாவு நீண்ட விளக்கம் அளித்த பிறகும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேச முற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தது இருந்தார்.

 

Tags :

Share via