நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 12 ஆண்டுகள் ஆண்டு சிறை.

திண்டுக்கல்லை சேர்ந்த அழகேந்திரன் என்பவரின் இடத்தை கடந்த 2016-ம் ஆண்டு மல்லம்மாள்(62), திம்மையன்(65), ராஜு(41), ஆறுமுகம்(60), துரைசாமி(57), ராமகிருஷ்ணன்(69) ஆகியோர் ஏமாற்றி அபகரித்ததாக மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள் 6 பேருக்கும் 12 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, தலா ரூ.12,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
Tags : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 12 ஆண்டுகள் ஆண்டு சிறை