குடிநீர்த்தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கை CBIக்கு மாற்ற கோரிய வழக்கு நாளை விசாரணை

by Editor / 24-04-2023 07:32:42pm
குடிநீர்த்தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கை CBIக்கு மாற்ற கோரிய வழக்கு நாளை விசாரணை


புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், வேங்கைவயல் நீர் தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று தெரியவந்துள்ளது. மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையம் பரிசோதனை செய்ததில் மனித கழிவு 3 பேருடையது என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் 11 பேரிடம் விரைவில் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில் வேங்கை வயல் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ,  மனித கழிவு கலந்த வழக்கை CBIக்கு மாற்ற கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளைவிசாரணைக்கு வருகிறது.

 

Tags :

Share via