கணவனுடன் தகராறு; விரக்தியில் இளம்பெண் தற்கொலை

by Staff / 20-04-2024 01:14:44pm
கணவனுடன்  தகராறு; விரக்தியில் இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி, ரங்கராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாரூக் மனைவி ரம்ஜான் பேகம் (28). இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆயினும், இரண்டு வருட காலங்களில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், விரக்தி அடைந்த மனநிலையில் வாழ்ந்து வந்த ரம்ஜான் பேகம், வேலம்பாடி கேர் நகர் பகுதியில் உள்ள ஃபாருக்அலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ரம்ஜான் பேகத்தின் தந்தை ஹாரூன் ரஷீத் (70) என்பவர், இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரம்ஜான் பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via