ஐ. சி. எப் அப்ரண்டீஸ் 510 காலியிடங்கள்   வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க தடை

by Editor / 29-05-2021 05:37:32pm
ஐ. சி. எப் அப்ரண்டீஸ் 510 காலியிடங்கள்   வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க தடை



சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ. சி. எப்) 510 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்ட நிலையில், அதில் வட மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகமானோர் சமீபகாலமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ. சி. எப்) 510 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியில் சேர அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மத்திய அரசு பணிகளில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்க முதல்படியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via