தொடர் கனமழையால் தொடர்பை இழந்த 128 கிராமங்கள்
மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு மகாராஷ்டிராவில் அமைந்துள்ள கட்சிரோலி மாவட்டம் மழைநீரால் சூழ்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 128 கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், ஹிங்கோலி மற்றும் நான்டெட் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :