பாதாள சாக்கடை திட்ட பணியின் போது விபரீதம் மண் சரிந்து தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

by Editor / 17-07-2022 01:45:15pm
பாதாள சாக்கடை திட்ட பணியின் போது விபரீதம் மண் சரிந்து தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

 விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். முதல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மண் தோண்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணியில் கல்லக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திவேல் ஆகியோர் ஈடுபட்டனர் அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via