வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு.

by Editor / 28-04-2022 10:19:06pm
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு.

வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அந்தப் புதிய இரட்டை ரயில் பாதையில் வியாழக்கிழமை (28.4.2022) அன்று தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு செய்தார். வழியில் சிறிய, பெரிய பாலங்கள், ரயில்வே கேட்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். வள்ளியூர், பனகுடி வடக்கு, ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார்.  5 நேரம் இந்த ஆய்வு நடை பெற்றது. ஆய்வில் பாதுகாப்பு ஆணையருடன் ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி பிரபுல்ல வர்மா, ரயில் விகாஸ் நிகம் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு.
 

Tags :

Share via