ஆப்கானில்., பயங்கரவாதிகள் தாக்குதல்!

by Editor / 06-06-2021 10:30:04am
ஆப்கானில்., பயங்கரவாதிகள் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில், வன்முறை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலிபான் பயங்கரவாதிகளுக்கும் - இராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிரனாக ஆப்கானிய இராணுவமும் பல அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தொடர்ந்து மீட்டெடுத்து வருகின்றனர். மேலும், பயங்கரவாதிகளும் பல நகர்களை கைப்பற்றும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வடக்கு பகுதி பாக்லான் மாகாணத்தின் ஜூகளா மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முந்தினம் இரவு ஜூகளா மாவட்ட இராணுவ சோதனைசாவடியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இராணுவத்தினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே விடிய விடிய தீவிர சண்டை நடைபெற்று வந்த நிலையில், 8 இராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும், பல அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

 

Tags :

Share via