ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள  கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்பு எவ்வளவு ? அறிக்கை அளிக்க உத்தரவு

by Editor / 11-06-2021 06:52:42pm
ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள  கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்பு எவ்வளவு ? அறிக்கை அளிக்க உத்தரவு



ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலமெங்கும் உள்ள கோயில்களில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. செயல் அலுவலர்கள் கோயில்களில் ஆய்வு செய்து ஜூன் 30ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் அண்மையில் ரூ.250 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.

 

Tags :

Share via