திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்-27ம் தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா

by Editor / 18-09-2022 11:09:27am
திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்-27ம் தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா

புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும். ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

 

Tags :

Share via