தஞ்சையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

by Staff / 22-09-2022 12:33:20pm
தஞ்சையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகன் ராம்குமார் வயது 31 என்ஜினியர் இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராம்குமாரின் பாட்டி மரணம் அடைந்தார் ஆனால் ராம்குமார் தனது பாட்டியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டு பிரேத பரிசோதனை அறிக்கை மேற்கொள்ளாமலும் உடற்கூறாய்வு சான்றிதழை வழங்காமல் இருந்து வந்தனர் இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறினார் அவர் 50 அடி உயரம் சென்றபோது அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணைபோலீஸ் சூப்பிரண்ட் ராஜா கிழக்குப்போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் மேலும் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர் 25 நிமிடம் ராம்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார் அதன் பின்னர் ராம்குமார் வயர்லெஸ் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார் பின்னர் அவரை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via