3 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.

by Staff / 26-09-2022 05:36:13pm
 3 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது.

மதுரை ஆரப்பாளையம் மருத்துவமனை அருகில் கரிமேடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சம்மட்டிபுரம் பாரதியார் தெரு கிருஷ்ணன் (31), கரிமேடு அழகரடி சங்கரநாராயணன் (37), திருநகர் சீனிவாசா தெரு சரண் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via