குடும்ப  சண்டையால் காவலரான கணவனும்,மருத்துவரான மகனும் தூக்கிட்டுதற்கொலை 

by Editor / 21-02-2023 10:31:34pm
குடும்ப  சண்டையால் காவலரான கணவனும்,மருத்துவரான மகனும் தூக்கிட்டுதற்கொலை 

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்னகற்பூரம் பட்டியை சேர்ந்தவர் அழகன் இவர் மேலவளவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில்  தலைமை காவலர் அழகன் அவரது மனைவி நாச்சம்மாள், அவரது மகன் தமிழ்வாணன், ஆகிய மூவரும் மேலூர் காந்தி நகரில் வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தலைமை காவலர் அழகனுக்கும்,அவரது மனைவி நாச்சமாளுக்கும்  இடையே அடிக்கடிசண்டைநடப்பது வழக்கமாக இருந்துவந்துள்ளது.இந்த நிலையில் தாய்,தந்தையின் சண்டையினை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் அவரது மகன் தமிழ்வாணன் பலமுறை கண்டித்தும் இருவரும் அதனை பொருட்பாடுத்தாமல் அடிக்கடி சண்டை இட்டு கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தாய் நாச்சம்மாள் மற்றும் தந்தை அழகன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். தேர்விற்கு படித்துக் கொண்டிருந்த அவரது மகன் தமிழ்வாணன் இதன்காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது வீட்டில் அங்கிருந்த கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதனை தொடர்ந்து அவரது தந்தை அழகன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து துக்கம் தாங்காமல் அவரும் வீட்டில் உள்ளே ஓடி சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் விரைந்துவந்து இருவரது உடலையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பபிரச்னை காரணமாக மருத்துவம் படித்துவரும் மகனும், தலைமை காவலரும்  உயிர் இழந்தனரா...? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா...? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தந்தையும்,மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமபவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via