தங்க தாலி பறிப்பு சம்பவத்தில் 2 பெண்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

by Editor / 28-09-2022 11:39:06pm
 தங்க தாலி பறிப்பு சம்பவத்தில் 2 பெண்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட ஏ.சி.எஸ்.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடஜலபதி ஆலயத்தில்  கடந்த 3 மாதங்களுக்கு  முன்பு தனியார் கல்லூரி வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் ஸ்ரீ வெங்கடஜலபதி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த விழாவில் கலந்துகொண்ட 9 பெண்களிடம் சுமார் 30 சவரன் தங்க தாலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்கள் மீது குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via