நகைகளை திருடி சுவற்றின் ஓட்டை வழியாக வெளியேற முடியாமல் சிக்கிய திருடன்

by Staff / 06-04-2022 11:35:47am
நகைகளை திருடி சுவற்றின் ஓட்டை வழியாக வெளியேற முடியாமல் சிக்கிய திருடன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அம்மன் கோவிலில் நகைகளைத் திருடி  ஒருவன் சுவரின் ஓட்டையில் இருந்து வெளியேற முடியாமல் வகையாக மாட்டிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜாடுபுடி கிராமத்தில் அமைந்துள்ள கிராம தேவதையான எல்லை அம்மன் கோவிலில் பாபுராவ் என்பவன் சுவற்றில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே நுழைந்தான்.

அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடிய அவன் அதே ஓட்டை வழியாக வெளியேற முயன்றான் அப்போது பாதி தூரத்தில் அவனால் வெளியேற முடியாமல் பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் மீதி பாதி உடலுக்கு உள்ளேயும் சிக்கிக்கொண்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பார்ப்பவை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்

 

Tags :

Share via