தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு.

by Editor / 25-03-2022 10:15:07am
தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு  வானிலை மையம் அறிவிப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 8 செ.மீ., ராஜபாளையம், பிளவக்கல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ்காத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது.


 

 

Tags : Meteorological Department announces chance of heavy rain with thunder and lightning in Tamil Nadu.

Share via