இருடியம் மோசடி 3.5 கோடி பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த நபர் தற்கொலை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி என்ற குட்டி தொழில் நடத்தி வந்தார் இவர் தேனி மாவட்டம் போடி தாலுகா பொட்டல்களம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கௌவுர் மோகன்தாஸ் என்பவரிடம் இருடியம் என்ற பொருளை வாங்குவதற்காக 3.5 கோடி ரூபாய் பலரிடம் கடனாக பெற்று கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட மோகன்தாஸ் சினிமா பட பாணியில் ராஜீவ் காந்தியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. காவல்துறையில் புகார் செய்தும் இதற்கான தீர்வு ஏற்படாத நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ராஜீவ்காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றநிலையில் இவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்24ஆம் தேதி இரவு சிகிச்சைபாலனின்றி உயிரிழந்துவிட்டார். இவருடைய குடும்பத்தார்கள் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் குவிந்துள்ளனர்.இவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த கௌவுர் மோகன்தாஸ் கைது செய்து காவல்துறை பணத்திற்கு உரிய தீர்வு கண்டு பணத்தை பெற்றுக்கொடுத்தல் மட்டுமே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Tags : Disappointed person commits suicide after paying Rs 3.5 crore