பற்றி எரியும் வாகனம்

by Staff / 07-10-2022 05:45:43pm
 பற்றி எரியும் வாகனம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம்-- முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது இப்பணி காவேரி யம்மாபட்டி அருகே நங்கஞ்சி ஆற்றுவழியே கீழே பாலம் அமைப்பதற்காக ஹிட்டாச்சி வாகனம் பணியில் ஈடுபட்டிருந்தபோது. அந்த வாகனத்தை திருப்பதி என்பவர் இயக்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஹிட்டாச்சி வாகனத்தில் டீசல் டேங்க் ஒயர் பழுது ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மல மலவென தீப்பிடிக்க தொடங்கியது.

இதுகுறித்து ஹிட்டாச்சி வாகன ஓட்டுனர் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பேரில் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மல மலவென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை சுமார் 45 நிமிடம் போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அனைத்தனர்.

இந்நிலையில் ஹிட்டாச்சி வாகனம் முற்றிலும் எரிந்து முடிந்தது இந்நிலையில் அந்த வாகனத்தை இயக்கிய திருப்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அதனால் அங்கு பொதுமக்கள் கூட தொடங்கியுள்ளனர் தீயணைப்பு வாகனம் வந்து தீயணைத்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Tags :

Share via