.சென்னை முழுவதும் காலையிலிருந்து தொடர் கனமழை.

by Admin / 01-11-2022 09:19:45am
.சென்னை முழுவதும் காலையிலிருந்து தொடர் கனமழை.

சென்னையில் வடகிழக்குபருமழைகாரணமாக ,நேற்றுமூன்று மணி நேரம்விடாது தொடர் மழை பெய்தது.இதனால்,அலுவலகங்களுக்குச்சென்று வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு உள்ளாயினர்.இந்நிலையில் ,நேற்று இரவு பல பகுதிகளில் விட்டு விட்டு பெய்தநிலையில் ,இன்று காலையிலிருந்தே தொடர் மழை சென்னை முழுவதும் பெய்து வருகிறது.பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதால்,கல்லூரிக்கு,அலுவலகத்திற்குச்செல்வோர் கடும் அவதிகிக்கு உள்ளாகியுள்ளனர்.வட சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர வடிகால் பகுதிக்கான வேலை நடப்பதால தெருகளைச் சுற்றிசெல்ல வேண்டியுள்ளதாகவும்பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

 

Tags :

Share via