கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் 25 இடங்களில்  NIA சோதனை 

by Editor / 31-05-2023 12:00:35pm
கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் 25 இடங்களில்  NIA சோதனை 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடக்கிறது. முன்னதாக, பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்போடு  தொடர்புடையவர்களை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என என்ஐஏவின் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில் பரிசுத் தொகை மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லையைச் சேர்ந்த முகமது அலி உள்ளிட்டவர்கள் பற்றி தகவல் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via