சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

by Staff / 10-10-2022 12:02:03pm
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார் என்னும் குறிப்பிட்டுள்ளார்

 

Tags :

Share via